தேவையானவை :
- காய்கறி – 1 கப் (காலிபிளவர், உரித்த பச்சை பட்டாணி, கேரட் … என உங்கள் விருப்பப்படி)
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 2
- இஞ்சி பூண்டு விழுது – 1 டீ ஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 1/2 டீ ஸ்பூன்
- மல்லித்தூள் (தனியா) – 1/4 டீ ஸ்பூன்
- கரம் மசாலா – 1/4 டீ ஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்
- தேங்காய்ப்பால் – 1 கப்
- சீரகம் – 1/4 டீ ஸ்பூன்
- பட்டை – 1 சிறிய துண்டு
- கிராம்பு – 2
- அன்னாச்சி பூ – 1
செய்முறை :
- காய்கறிகளை பொடியாக நறுக்கி, முக்கால்வாசி அளவு வேகவைத்து, பின் தண்ணீரை வடித்துவிட்டு தனியே வைக்கவும்.
- வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.
- தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். (1 கப் அளவுக்கு தேங்காய்பால் கிடைக்கும் படி.)
- ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும்.
- சூடான எண்ணெயில் பட்டை, கிராம்பு, அன்னாச்சி பூ, சீரகம் சேர்க்கவும்.
- சீரகம் பொரிந்தபின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
- பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கிய பின் இதனுடன் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பிரட்டி விடவும்.
- தேங்காய்ப்பாலையும் இதனுடன் சேர்த்து சில நிமிடங்கள் நன்றாகக் கொதிக்கவிடவும்.
- தேங்காய்ப்பாலின் பச்சை வாடை மடங்கி, நல்ல கூட்டுப் போல் திக்காக வரும்போது, வேக வைத்து வைத்திருக்கும் காய்கறிகளையும் இதனுடன் சேர்த்து சில நிமிடங்கள் மிதமான தணலில் அடுப்பில் வைத்திருக்கவும்.
- தேவையான அளவு உப்பினை சால்னாவுடன் கலந்து கொள்ளவும்.
- சூடாக பரோட்டாகளுக்கு / சப்பாத்திக்கு சைடு-டிஷ்ஷாக பரிமாறவும்.

No comments:
Post a Comment